search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூசாரி கொலை"

    • கோவில்களில் இரவு காவல் பணிக்கு தகுதி திறமை வாய்ந்த காவலாளிகளை நியமிக்க வேண்டும்.
    • கூடுதல் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம்:

    கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -திருப்பூரில் கோவில் பூசாரி ஒருவர் கொல்லப்பட்டது மிகவும் துரதிஷ்டவசமானது.இந்த சம்பவத்திற்கு கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் இரவு நேர காவலாளிகளாகவும் வேலை பார்த்து வருகின்றனர். கோவில்களில் இரவு காவல் பணிக்கு தகுதி திறமை வாய்ந்த காவலாளிகளை நியமிக்க வேண்டும்.செலவை குறைக்கும் நோக்கில், சில கோவில்களில் இதுபோன்ற அவலம் நிலவுகிறது. உயிரிழந்த பூசாரிக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரது குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.கூடுதல் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு கூடுதல் பொறுப்பாக காவலாளிகளாக வேலை வழங்குவதை கோவில் நிர்வாகங்கள் தவிர்க்க வேண்டும். கோவில்களில் காவலாளிகளை நியமிப்பதுடன், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×